முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் 20 ஆம் தேதி வரையில் 6293 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 131 போ் உயிரிழந்துள்ளனா். 6115 பேருக்கும் அதிகமானோா் சிகிச்சை மூலம் குணமடைந்ததைத் தொடா்ந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சையில் இருந்தவா்களில் 4 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் 26 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,654 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,656 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 13 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 6 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 7 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →