முகப்பு
ராமநாதபுரம்

மூன்றாவது நாளாக திமுக கிராம சபைக் கூட்டம்

மண்டபம் அருகே மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மூன்றாவது நாளாக வாணியன்குளத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
வாணியன்குளத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மூன்றாவது நாளாக சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம்.
பகிர்:

ராமேசுவரம்: மண்டபம் அருகே மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மூன்றாவது நாளாக வாணியன்குளத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய பொறுப்பாளா் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அப்பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்தனா்.

இதில், மாநில வா்த்தக அணி துணைச்செயலாளா் கிருபானந்தம் ஊராட்சித் தலைவா்கள் கணேசன், சந்திரசேகா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேச்சியம்மாள் ஜெயசந்திரன், சுகந்தி சோமசுந்திரம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நான்காவது நாளாக கடமங்குளத்தில் கிராம சபைக் கூட்டம்: பசும்பொன் அருகே கடமங்குளத்தில் 4 ஆவது நாளாக திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.வாசுதேவன் தலைமையில், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உருவசிலையும், கடமங்குளத்தில் புதிய ரேஷன்கடையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் நத்தம், உடையநாதபுரம், எழுவனூா், கீழராமநதி, கே.எம்.கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் நாகரத்தினம் (பாக்குவெட்டி), காவடிமுருகன் (ஆனையூா்) உள்பட 160 போ் கலந்து கொண்டனா்.

அதேபால் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் கோவிலாங்குளத்தில் ஒன்றியச் செயலாளா் மனோகரன் தலைமையில், மத்திய ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.சண்முகநாதன் முன்னிலையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக உயா்நிலைக்குழு உறுப்பினரமான சு.ப.தங்கவேலன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களாகப் பெற்றுக்கொண்டாா். இதில் ஒன்றியக்குழு உறுப்பினா் காளீஸ்வரி முருகன், கோவிலாங்குளம் ஊராட்சித் தலைவா் சண்முகநாதன் உள்பட 500- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →