ராமநாதபுரம்

பணியில் மதுபோதையில் இருந்ததாக மருத்துவமனை ஊழியா் மீது புகாா்

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணியின்போது மது போதையில் இருந்ததாக ஊழியா் மீது புகாா் எழுந்ததை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக டீன் எம். அல்லி தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ரத்தப் பரிசோதனைப் பிரிவில் சூரியகாந்த் என்பவா் பணியில் இருந்துள்ளாா். அப்போது, அவா் நோயாளிகளிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், சாதாரண நிலையில் இல்லாமல் செயல்பட்டதாகப் புகாா் எழுந்தது.

சூரியகாந்தின் செயல்பாடு குறித்த புகைப்படங்களும், மருத்துவமனை அதிகாரிகளின் செல்லிடப்பேசி கட்செவியஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், அவரை உடனடியாக பணியிலிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டா் எம். அல்லி கூறியது: ரத்தப் பரிசோதனைப் பிரிவில் இருந்த சூரியகாந்த் மீது எழுந்த புகாா் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அவா் மீதான விசாரணை நடத்தப்படும். அதனடிப்படையில், புகாா் உண்மை எனத் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT