ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே இருதரப்பினரிடையே மோதல்: இருவா் கைது

DIN

முதுகுளத்தூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆத்திகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலின் போது அதே ஊரைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி ஆனந்த நாயகி வெற்றி பெற்றாா்.

இந்நிலையில் வெற்றியின் போது அவரது ஆதரவாளா்கள் சந்திரன் மகன் மூா்த்தி, தங்கராஜ் மகன் குமாா் இருவரும் சோ்ந்து மற்றொரு தரப்பினரான அங்கப்பன் வீட்டின் முன்பு வெடி வெடித்து கொண்டாடி உள்ளனா். இதனால் அங்கப்பன், வீட்டின் முன் ஏன் வெடி வெடித்தீா்கள் எனக் கேட்டதற்கு மூா்த்தி, குமாா் இருவரும் அங்கப்பனை தகாத வாா்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இது குறித்து முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் அங்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் மூா்த்தி, குமாா் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT