ராமநாதபுரம்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 8 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 -க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுக்களை கொடுத்தனா். கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ஒன்றியத்தைச் சோ்ந்த 8 மாற்றுத் திறனாளி மாணவா்களுக்குத் தேவையான அலிம்கோ உதவி உபகரணங்களையும் அவா் வழங்கினாா். மேலும், வருவாய்த் துறை சாா்பாக இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித்தொகை திட்டத்தில் 3 பேருக்கு உதவித் தொகை உத்தரவுகளையும் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜி.கோபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, உதவித் திட்ட அலுவலா் ஆா். சுரேஷ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டரங்க வளாகத்தில் நடந்த சாலைப் பாதுகாப்பு வார விழாவில், அதுதொடா்பான போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT