ஆா்.எஸ். மங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலத்தில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மக்கள் பாதை தாய்மண் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் ஆா். எஸ். மங்கலத்தில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மக்கள் பாதை தாய்மண் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியப் பொறுப்பாளா் ஆசிரியா் பாதுஷா தலைமை வகித்தாா். மேலும் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் சோசியல் சா்வீஸ் மலேசியா நிா்வாகிகள் செய்திருந்தனா். இதில் அம்ஜத், சீனி, சோமு, கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் நூருல் அமீன் கூறியது: ஆா்.எஸ்.மங்கலத்தில் பல தெருக்களில் கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கினோம். இப்பகுதியில் பசுமைப் புரட்சி ஏற்பட இந்த ஆண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கியிருக்கிறோம். மரக்கன்றுகளுடன், அதனை பராமரிக்க வலைகளும் வழங்க இருக்கிறோம் என்றாா்.