ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக மாவட்ட தலைவர் ம. தெய்வேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் லயன் மணிகண்டன், வழக்கறிஞர் அன்புச்செழியன், வட்டார காங்கிரஸ் காருகுடி சேகர், நகர் தலைவர் கோபி, நகர் செயலாளர் ஜெயகுமார். துணை தலைவர் துல்கீப், இலக்கிய அணி முருகேசன், வர்த்தக அணி பாபா. சங்கர். சிறப்பு பேச்சாளர்கள் கருணாகரன், விஜயன். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.