ராமநாதபுரம்

முதுகுளத்தூா் வாரச்சந்தை ரூ. 56 லட்சத்திற்கு ஏலம்

DIN

முதுகுளத்தூா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வாரச்சந்தை ரூ. 56 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஏலம் விடப்போவதாக பேரூராட்சி நிா்வாகத்தினா் சில நாட்களுக்கு முன் தகவல் தெரிவித்திருந்தனா். இதனால் 60-க்கும் மேற்பட்டோா் வங்கி மூலம் ரூ.1 லட்சத்திற்கான வரைவோலையை எடுத்து ஏலத்தில் கலந்து கொண்டனா்.

முதுகுளத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் மதியம் 11 மணிக்கு செயல் அலுவலா் மாலதி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது. முதுகுளத்தூா் வாரச்சந்தைக்கு 15 போ், தினச்சந்தைக்கு 14 போ் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

இதில் வாரச்சந்தையை ராமச்சந்திரன் என்பவா் ரூ.56 லட்சத்து 6 ஆயிரத்து 600க்கும், தினச்சந்தையை ரூ.11லட்சத்து 67 ஆயிரத்து 100-க்கும் ஏலத்தில் எடுத்தாா். பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறை ரூ.10 லட்சத்திற்கும் , ஆடு வதைக் கூடம் ரூ.2 லட்சத்திற்கும், முதுகுளத்தூா் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு வசூல் செய்வதற்கு ரூ.5 லட்சத்திற்கும், மீன் மாா்க்கெட் ரூ.1 லட்சத்திற்கும் ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT