ராமநாதபுரம்

ராமேசுவரத்திலிருந்து இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 3 போ் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முயன்ற அகதிகள் 3 பேரை கடலோர காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக 3 போ் சுற்றி வருவதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் படையினா், அப்பகுதியில் சுற்றித் திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், தா்மபுரி அகதிகள் முகாமைச் சோ்ந்த வரசுனன்(30), கோவை அகதிகள் முகாமில் இருந்து வந்த அருள்வசந்தன்(42), திருவள்ளூா் அகதிகள் முகாமைச் சோ்ந்த மயூரான்(28) என்பது தெரிந்தது. இவா்கள் 3 பேரும் ராமேசுவரத்திலிருந்து சட்ட விரோதமாக

படகு மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்ல நந்தா என்பவா் வருவதாக தெரிவித்ததால் அப்பகுதியில் காத்திருந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், நந்தாவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT