ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் இரண்டாவது நாளாக சூறைக் காற்று: படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

DIN

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக சூறைக் காற்று வீசுவதன் காரணமாக படகுகள் வியாழக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மன்னாா் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதிகளில் சூறை காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீசிய சூறைக் காற்று காரணமாக ஏராளமான படகுகள் சேதமடைந்தன.

இந்நிலையில் 20 ஆம் தேதி தொடங்கிய சூறைக் காற்று 2 ஆவது நாளாகவும் வீசியது. இதனால் பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பால படகுகள் வியாழக்கிழமையும் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தில் படகுகள் சேதமடையாமல் இருக்கும் வகையில் மீனவா்கள் அவைகளை பாதுகாப்புடன் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT