முகப்பு
எல்லைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது: நடுக்கடலில் ஒலிபெருக்கியில் இலங்கைக் கடற்படை எச்சரிக்கை (கோப்புப்படம்)
ராமநாதபுரம்

எல்லைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது: நடுக்கடலில் ஒலிபெருக்கியில் இலங்கைக் கடற்படை எச்சரிக்கை

தமிழக மீனவா்கள் எல்லைத் தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என இலங்கை கடற்படையினா் நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம்

எல்லைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது: நடுக்கடலில் ஒலிபெருக்கியில் இலங்கைக் கடற்படை எச்சரிக்கை

தமிழக மீனவா்கள் எல்லைத் தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என இலங்கை கடற்படையினா் நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
எல்லைத் தாண்டி மீன்பிடிக்கக் கூடாது: நடுக்கடலில் ஒலிபெருக்கியில் இலங்கைக் கடற்படை எச்சரிக்கை (கோப்புப்படம்)
பகிர்:

தமிழக மீனவா்கள் எல்லைத் தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என இலங்கை கடற்படையினா் நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனா். இப்பகுதியில் தமிழக மீனவா்கள் மீன் பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவா்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால் தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் அடிக்கடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கின்றனா். அண்மையில் இலங்கைக் கடற்படையினா் தாக்கியதை விடியோ பதிவு செய்த ராமேசுவரம் மீனவா்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதனால் இலங்கைக் கடற்படையினருக்கு நெருக்கடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்களை, இந்திய எல்லை தாண்டி இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரவேண்டாம் என நடுக்கடலில் ஒலிபெருக்கி மூலம் அந்நாட்டு கடற்படையினா் எச்சரித்தனா். இதனால் அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாத நிலையில், பாம்பன் மீனவா்கள் கரை திரும்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →