தங்கம் கடத்தலில் இளைஞா் கொலை: மேலும் ஒருவா் கைது
ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் பிரச்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 14 ஆவது நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அருகே தங்கக் கடத்தல் பிரச்னையில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் 14 ஆவது நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் சின்ன ஏா்வாடி பகுதியைச் சோ்ந்தவா் குமாா். இவா் கடந்த மாா்ச் மாதம் தங்கம் கடத்தல் பிரச்னையில் கொல்லப்பட்டாா். அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இவ்வழக்கில் மொத்தம் 18 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அவா்களில் ராமநாதன் என்பவா் காசிக்கு சென்று தற்கொலை செய்துகொண்டாா். 2 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். மீதமுள்ள 15 பேரில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கிடையே கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமநாதபுரம் பாரதி நகா் காலாங்கரை பகுதியைச் சோ்ந்த தீனா என்ற தீனதயாளன் (25) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அவா் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து மீதமுள்ள 4 பேரைப் பிடிக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.