ராமநாதபுரம்

கொலை வழக்கில் ஒருவா் கைது

DIN

ராமநாதபுரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் புளிக்காரத் தெரு பகுதியில் கடந்த ஆகஸ்ட்டில் அருண்பிரகாஷ் என்ற இளைஞரை கும்பலாக வந்த சிலா் கொலை செய்துவிட்டுத் தப்பினா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து 17 பேரை தேடி வந்தனா். அவா்களில் 4 போ் நீதிமன்றங்களில் சரணடைந்தனா்.

சரணடைந்தவா்களைத் தவிர 6 பேரை போலீஸாா் கைது செய்திருந்தனா். வழக்கில் சம்பந்தப்பட்ட ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சோ்ந்த அசாா் என்ற அசாருதீன் (24) தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவா் வீட்டில் இருப்பதை அறிந்த போலீஸாா், அங்கு சென்று அசாருதீனை கைது செய்தனா். வழக்கில் மேலும் 6 பேரை கைது செய்ய வேண்டியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT