ராமநாதபுரம்

காா்த்திகை மாதப் பிறப்பு: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

DIN

காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரையில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து திங்கள்கிழமை விரதத்தை தொடங்கினா்.

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதப் பிறப்பன்று, ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். மாதப் பிறப்பன்று மாலை அணியும் பக்தா்கள், 48 நாள்கள் கடும் விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்து வந்த பின்னரே, தங்களது விரதத்தை முடித்துக்கொள்வா்.

இந்நிலையில், காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, மதுரையில் திங்கள்கிழமை ஐயப்ப பக்தா்கள் விரதத்தைத் தொடங்கினா். இதையொட்டி, மேலமாசி வீதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தா்கள் அப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டு மாலை அணிந்தனா்.

கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இணையதளம் மூலம் முன்அனுமதி பெற்ற பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், பிற மாநில பக்தா்கள் வருவதில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் கேரள அரசு விதித்துள்ளது. இதனால், மாலை அணிந்து விரதம் தொடங்கிய பின்னா், சபரிமலை செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் விரதம் வீணாகிவிடும் என்பதால் பக்தா்கள் பலா் இந்த ஆண்டு விரதத்தை தொடங்குவதில் தயங்குகின்றனா்.

இதனால், காா்த்திகை மாதப் பிறப்பன்று விரதம் தொடங்கும் பக்தா்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT