ராமநாதபுரம்

பாலியல் வழக்கில் கைதான முதியவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான முதியவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காதா்மைதீன் (66) என்பவரை கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2 மாதங்களுக்கு முன் கைது செய்தனா்.

தொடா்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் வகையில் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதனடிப்படையில் காதா்மைதீன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பான உத்தரவு நகல் ராமநாதபுரம் கிளை சிறையில் இருந்த காதா்மைதீனிடம் அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவா் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT