பாம்பனில் ஒன்றாம் எண் புயல்கூண்டு ஏற்றம்மீன்பிடிக்க தடை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்பாம்பனில் ஒன்றாம் எண் புயல்கூண்டு ஏற்றம்மீன்பிடிக்க தடை
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் திங்கள்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினா் தடை வித்துள்ளனா். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதும் துறைமுகங்களில் விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.