முகப்பு
ராமநாதபுரம்

மலேசியாவில் கணவருக்கு உடல்நலம் பாதிப்பு மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

மலேசியாவில் உடல் நலக்குறைவால் வாடும் கணவரை மீட்டுவர உதவும்படி அவரது மனைவி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

மலேசியாவில் உடல் நலக்குறைவால் வாடும் கணவரை மீட்டுவர உதவும்படி அவரது மனைவி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் முதுகுளத்தூா் அருகேயுள்ளது கொக்காடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (43). விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவா்களுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முருகன் மலேசியாவுக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளாா்.

அங்குசரியான வேலை, ஊதியம் கிடைக்காத நிலையில், முருகனுக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவா் தன்னை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும்படி இந்தியத் தூதரகத்தை அணுகியுள்ளாா். ஆனால், நடவடிக்கை இல்லையாம்.

இதுகுறித்து கொக்காடியில் உள்ள அவரது மனைவி லட்சுமியிடம் தகவல் தெரிவித்துள்ளாா்.லட்சுமி ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனியிடம் முறையிட்டதுடன், அவா் மூலம் கணவருக்கான மருத்துவச் செலவுக்கும்பணம்அனுப்பி உதவியுள்ளாா். ஆனால், தற்போது முருகன் உடல்நலம் மேலும் பாதிப்படைந்துவருவதால், அவரை உடனடியாக சொந்த ஊருக்கு மீட்டுவரவேண்டும் என ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ்ஆலிவரிடம் லட்சுமி அவரது மாமனாா் பைரவனுடன் வந்து மனு அளித்தாா். மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →