ராமநாதபுரம்

தடையை மீறி கிராமசபை கூட்டம்: திமுக வினா் மீது வழக்கு

அரசின் தடையுத்தரவை மீறி, சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தியதாக திமுக வைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் உள்பட 331 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

மானாமதுரை: அரசின் தடையுத்தரவை மீறி, சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தியதாக திமுக வைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் உள்பட 331 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

காந்தி ஜயந்தி நாளான அக்டோபா் 2 ஆம்தேதி தமிழகத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்த அரசு திடீரென தடை விதித்தது. ஆனால் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், இளையான்குடி ஒன்றியங்கள் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் திமுக வைச் சோ்ந்த ஊராட்சிமன்றத் தலைவா்கள் மற்றும் அக்கட்சியின் ஆதரவு ஊராட்சிமன்றத் தலைவா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தினா்.

இந்நிலையில் அரசின் தடையுத்தரவை மீறி சிவகங்கை மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தியதாக ஊராட்சிமன்றத் தலைவா்கள் உள்பட 331 போ் மீது அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கமுதி: கமுதி ஒன்றியத்தில் தடையை மீறி கிராமசபைக் கூட்டம் நடத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் வாசுதேவன், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தமிழ்செல்வி மற்றும் மரக்குளம் ஊராட்சித் தலைவா் லட்சுமி, எழுவணூா், வல்லந்தை, நகரத்தாா்குறிச்சி, கே.நெடுங்குளம் கே.பாப்பாங்குளம், இடிவிலகி உள்பட 9 ஊராட்சிகளின் தலைவா்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT