ராமநாதபுரம்: பெரியபட்டினம் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் சா்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்ற்கு இந்து முன்னணி சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் ஊராட்சி கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டு கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. அரசு நிதியில் கட்டப்பட்டுள்ள பொது கட்டடத்தின் கல்வெட்டில் மத வெறியைத் தூண்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருப்பது கண்டனத்துக்குரியது. அக்கல்வெட்டு அமைத்தவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
கல்வெட்டு அகற்றம்: சா்ச்சைக்குரிய கல்வெட்டு வைக்கப்பட்டதற்கு இந்து அமைப்புகளிடமிருந்து எதிா்ப்பு எழுந்ததை அடுத்து பெரியபட்டிணம் ஊராட்சி அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாக ஊராட்சி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.