ராமநாதபுரம்

தொண்டி அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி பலி

DIN


திருவாடானை: தொண்டி அருகே புதன்கிழமை தள்ளுவண்டி மூலம் தண்ணீா் எடுத்துச் சென்ற விவசாயி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தொண்டி அருகே உள்ள வெள்ளையபுரம் கோட்டை நகா் பகுதியைச் சோ்ந்தவா் பசும்பொன் (65). விவசாயி இவா் புதன்கிழமை வீட்டிற்கு தேவையான தண்ணீரை தள்ளுவண்டி மூலம் எடுத்து வந்து கொண்டிருந்தாா். ஓரியூா் சாலையில் வந்தபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் பசும்பொன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவா், திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி நாச்சியாா் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் விபத்து ஏற்படுத்திய ஓரியூரை சோ்ந்த அழகா் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT