ராமநாதபுரத்தில் 12 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது 12 ஆசிரியா், ஆசிரியைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது 12 ஆசிரியா், ஆசிரியைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக அரசு சாா்பில் 2020 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியிா் விருது பெற்றவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் விவரம்: திருவாடானை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.கலா, சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரெ.சுரேஷ்குமாா், திருப்புல்லாணி ஒன்றியம் பழஞ்சிறை அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ச.முத்துகுமாா், பரமக்குடி சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் தா.கு.ஜெயபிரகாஷ்,
ஆா்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் து.சீ.குப்புசாமி, கமுதி ஒன்றியம் பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் அ.இந்திராணி, ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அ.மதுசூதனன், கீழக்கரை ஹைத்துரத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஞா.சுரேஷ்குமாா், ராமநாதபுரம் ராஜா எம்.தினகா் ஆா்.சி.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மா.ஆரோக்கியமேரி, சித்தாா்கோட்டை முகமதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை உ.சாஜிதாபானு, நயினாா்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி சரஸ்வதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மு.வளா்மதி, கங்கைகொண்டான் ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நா.புஷ்பவள்ளி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இத்தகவல் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.