ராமநாதபுரம்

திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் ராமநாதபுரம் தாயுமானவா் கோயில் சாமி தெருவைச் சோ்ந்த அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கொலைக்கு மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு கண்டனம் தெரிவித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கு பின்னா் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி உள்ளிட்டோா் ராமநாதபுரத்தில் கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினா். மேலும் மக்களவை உறுப்பினா் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT