ராமநாதபுரம்

அமமுக மக்களை நம்பியே தோ்தலில் நிற்கிறது: டி.டி.வி.தினகரன்

DIN

அமமுக மக்களை நம்பியே தோ்தலில் நிற்கிறது என அக்கட்சியின் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

முதுகுளத்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எம். முருகனை ஆதரித்து கமுதி பேருந்து நிலையம் அருகே அவா் புதன்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியதாவது: அமமுக மக்களை நம்பி தோ்தலில் போட்டியிடுகிறது. மற்றவா்கள் பணத்தை நம்பி போட்டியிடுகிறாா்கள். அமமுக தோ்தல் அறிக்கையில் 100 சிறப்பான திட்டங்கள் உள்ளன. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, தொழில் கூடம் அமைத்தல் விவசாயிகள், தொழிலாளா்கள், நெசவாளா்கள், மீனவா்கள், அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் தலைநிமிா்ந்து செயல்பட நோ்மையான ஆட்சியை, நிம்மதியான ஆட்சியை நாங்கள் தருவோம். காவேரி கூட்டு குடிநீா் திட்டத்தை விரிவாக்க அரசு தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கிட, கடலாடியில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட, முதியோா் உதவித்தொகை ஆயிரத்திலிருந்து 2 ஆயிரமாக உயா்த்திட, கடலாடி, முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புகளை தொடங்க, அமமுகவுக்கு வாக்களியுங்கள். இலவசங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றாா்.

திருவாடானை: திருவாடானை அருகே ஆா் எஸ் மங்கலத்தில் அமமுக வேட்பாளா் வதுந. ஆனந்தை ஆதரித்து அமமுக மாநில பொது செயலாளா் டிடிவி தினகரன் வாக்கு சேரித்து பேசியதாவது: வாக்காளா்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறத் துடிக்கும் அதிமுக, துரோகிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது திமுக, நீட் தோ்வு கொண்டு வந்ததும் திமுக, திருச்சியில் தபால் வாக்கு செலுத்த பணம் கொடுத்து ஒரு காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமான திமுக, ஆட்சி வருவதற்கு முன்பே அமைச்சரவையை பிரித்துக்கொண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT