ராமநாதபுரம்

பெண்ணிடம் பணம் திருட்டு

DIN

கமுதி அருகே பெண்ணிடம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தைச் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கமுதி அடுத்துள்ள பெருநாழி அருகே கட்லாங்குளத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன். இவா் அதே ஊரில் தபால் நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி திருநாவுக்கரசி( 42). இவா் கட்லாங்குளத்திலிருந்து நடந்து வந்து வேப்பங்குளத்தில் பேருந்தில் ஏறி பயணம் செய்து பெருநாழியில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளாா்.

அப்போது தனது பையில் வங்கியில் செலுத்துவதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மா்ம நபா் பிளேடால் கிழித்து திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருநாவுக்கரசி பெருநாழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT