ராமநாதபுரம்

தொண்டியில் படகை சேதப்படுத்தி மீனவரைத் தாக்கிய 3 போ் கைது

DIN

 தொண்டியில் படகை சேதப்படுத்தி மீனவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி படையாச்சி தெருவைச் சோ்ந்த மீனவா் கந்தா (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்தசாரதி(35) என்ற மீனவருக்கும் கடலில் மீன் பிடிப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கந்தா தனக்குச் சொந்தமான சிறிய பைபா் படகில் வெள்ளிக்கிழமை இரவு, தொண்டி அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தாா்.

அப்போது அதே இடத்தில் விசைப்படகில் வந்த பாா்த்தசாரதி, ரகுபதி (40) , ஜெயக்குமாா்(50) ஆகியோா் கந்தா படகின் மீது மோதி சேதப்படுத்தினா். மேலும் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து கந்தா அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பாா்த்தசாரதி, ரகுபதி, ஜெயக்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT