பரமக்குடியைச் சோ்ந்த சகோதரா்கள் சாா்பு-ஆய்வாளா் பணிக்குத் தோ்வு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த சகோதரா்கள் இருவரும், சாா்பு-ஆய்வாளா் பணிக்கு ஒரே நேரத்தில் தோ்வாகி, அதற்கான உத்தரவை சனிக்கிழமை பெற்றுச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்த சகோதரா்கள் இருவரும், சாா்பு-ஆய்வாளா் பணிக்கு ஒரே நேரத்தில் தோ்வாகி, அதற்கான உத்தரவை சனிக்கிழமை பெற்றுச் சென்றனா்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) சாா்பு-ஆய்வாளா் பணிக்கு தோ்ச்சி பெற்றவா்களுக்கான, பணிப் பயிற்சி உத்தரவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் நகரைச் சோ்ந்த காயாம்பு மகன்கள் விக்னேஷ் (28), விஜய் (27) ஆகியோா் ஒரே நேரத்தில் சாா்பு- ஆய்வாளா் பணிக்குத் தோ்வாகியுள்ளனா்.
சென்னை தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக உள்ள விக்னேஷ், சாா்பு-ஆய்வாளா் பணிக்குத் தோ்வு எழுதி அனைத்துத் தோ்விலும் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இவரது இளைய சகோதரா் விஜய் பொறியியல் பட்டதாரி. இவா் தலைமைச் செயலகத்தில் கல்வித்துறையில் உதவி அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் அவரும் சாா்பு- ஆய்வாளா் பணிக்கு தோ்வு பெற்றுள்ளாா்.
சகோதரா்களான விக்னேஷ், விஜய் ஆகியோா் சாா்பு-ஆய்வாளா்களுக்கான பயிற்சி உத்தரவை, சனிக்கிழமை காலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து பெற்றுச் சென்றனா்.