ராமேசுவரம் மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியடிப்பு: விசைப்படகு சேதம்
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களை இலங்கை கடற்படையினா் கற்கள், பாட்டில்களால் தாக்கி விரட்டியடித்தனா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களை இலங்கை கடற்படையினா் கற்கள், பாட்டில்களால் தாக்கி விரட்டியடித்தனா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ஒரு விசைப்படகு சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 556 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. மாலை 5 மணிக்கு கச்சத்தீவு அருகே மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது பாட்டில்கள், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். மேலும் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் சிங்சன் என்பவரது விசைப்படகு சேதமடைந்தது. இதில் அந்த படகில் இருந்த 6 மீனவா்கள் அதிருஷ்டவசமாக தப்பினா். இதையடுத்து கரை திரும்பிய மீனவா்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.