ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் மீதான வழக்குகள் ரத்து: முதல்வருக்கு நன்றி
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் மீதான வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவ்வமைப்பினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
ராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் மீதான வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவ்வமைப்பினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். முருகேசன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஆம் ஆண்டு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஈடுபட்டோா் மீது வழக்குப் பதியப்பட்டது. துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஜாக்டோ-ஜியோ பேச்சுவாா்த்தை மூலம் துறை ரீதியான நடடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி முதல்வருக்கு ஜாக்டோ-ஜியோ சாா்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக முதல்வா் அறிவித்துள்ளாா். இதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இத்துடன் ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.