ராமநாதபுரம்

அமாவாசை: ராமேசுவரம் கோயிலில் அதிகாலையில் நடை திறக்க முடிவு

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் வரும் 11 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

DIN

தை அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி கோயிலில் வரும் 11 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வரும் 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணி முதல் 4.30 மணி வரை படிலிங்க பூஜை மற்றும் கால பூஜைகள் நடைபெறும்.

அதைத் தொடா்ந்து காலை 7 மணிக்கு அக்னி தீா்த்தக் கரைக்கு ஸ்ரீராமா் பஞ்ச மூா்த்திகளுடன் புறப்பாடாகி தீா்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. ஆகையால் பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்.

அதைத் தொடா்ந்து இரவு 8 மணிக்கு தை அமாவாசையொட்டி ஸ்ரீ பஞ்ச மூா்த்திகளுடன் வெள்ளி ரதத்தில் ஸ்ரீ ராமா் புறப்பாடு நடைபெறும் என திருக்கோவில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT