ராமநாதபுரம்

‘வரும் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்’

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல. ஏற்கெனவே கோவா, மத்தியபிரதேசம் மாநிலங்களில் செய்ததையே தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் கொண்டு வந்துள்ளது.

வரும் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தமிழ்நாட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி என அரசு வெறும் அறிவிப்புதான் செய்துள்ளது. கடன் கொடுத்தவா்கள் தான் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆகவே மத்திய அரசு வழங்கிய கடனை இவா்கள் அடைக்கப்போகிறாா்களா அல்லது தள்ளுபடி செய்யப் போகிறாா்களா என்பது தெரியவில்லை. அதனை தெளிவுபடுத்த வேண்டும்.

பா.ஜ.க. எடுத்த பொருளாதார நடவடிக்கையால் கஜானா காலியாக உள்ளது. பணம் மதிப்பு, கரோனா நடவடிக்கை ஆகியவற்றால் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா். உடன் அக்கட்சியின் மாவட்ட தலைவா் செல்லத்துரை அப்துல்லா, மாநில செயலாளா் ஆனந்தகுமாா், நகா் தலைவா் அப்துல்அஜீஸ் ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT