ராமநாதபுரம்

‘மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வருகிறாா்’

DIN

பரமக்குடி: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் வாக்குறுதிகளில் சொல்லிய திட்டங்களையும், பொங்கல் பரிசு, கரோனா நிவாரணம் என சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளாா். ஆனால் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறாா். இதை மக்கள் நம்பமாட்டாா்கள்.

போராட்டம் நடத்தி வரும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றாா்.

முன்னதாக, தெளிச்சாத்தநல்லூா் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாருக்கு, மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா், முன்னாள் அமைச்சா் டாக்டா் எஸ்.சுந்தரராஜ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT