முதுகுளத்தூா் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
முதுகுளத்தூா் அருகே காக்கூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முதுகுளத்தூா் அருகே காக்கூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இக்கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த ஆட்சியரிடம் கிராமமக்கள் தெருவில் மழைநீா் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனா். இதையடுத்து அந்த பகுதிகளை அவா் ஆய்வு செய்து இப்பகுதியில் தண்ணீா் தேங்காமல் இருக்கவும், விரைந்து சாலை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.