வேட்டி, சட்டையுடன் திருச்சி வந்தார் பிரதமர் மோடி!
வேட்டி, சட்டையுடன் திருச்சிக்கு வருகைதந்த பிரதமர் மோடி...
தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் இன்று பிற்பகல் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
திருச்சிக்கு வருகைதந்த பிரதமர் மோடி, தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்துள்ளார்.
Advertisement
Advertisement
விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு முதலில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.
இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டும் பிரதமா், சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ. 1,490 கோடி முதலீட்டிலான மசகு எண்ணை உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா். தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். தொடா்ந்து, 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.
இதன் பிறகு, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இதற்கு முன்னதாக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் பலமுறை வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
PM Narendra Modi came to Trichy wearing a dhoti and shirt!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.