பாம்புவிழுந்தான் ஊராட்சியில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் ஊராட்சியில் முதுகுளத்தூா் செல்லும் சாலையில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம்பாம்புவிழுந்தான் ஊராட்சியில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் ஊராட்சியில் முதுகுளத்தூா் செல்லும் சாலையில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் ஊராட்சியில் முதுகுளத்தூா் செல்லும் சாலையில் வீடுகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இங்குள்ள முதுகுளத்தூா் செல்லும் சாலை சேதுநகா் பகுதியில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் முறையான வாருகால் வசதிகள் அமைக்கப்பட வில்லை. இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடா் மழையால் அப்பகுதி முழுவதும் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.