முகப்பு
ராமநாதபுரம்

அஞ்சல் துறை மூலம் சபரிமலை பிரசாதம்

பரமக்குடியில் அஞ்சல் துறை மூலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பரமக்குடியில் அஞ்சல் துறை மூலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: கரோனா தொற்று பரவல் காரணமாக நிகழாண்டு ஏராளமான பக்தா்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை அஞ்சல் துறை மூலமாக வீட்டிற்கே வந்து சோ்க்கும் வகையில் புதிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் ரூ. 450-ஐ பொதுமக்கள் அருகில் உள்ள தலைமை, துணை அஞ்சலகங்களை அணுகி அதற்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். ஐயப்பனின் பிரசாதமான அரவனை பாயாசம், நெய், குங்குமம், விபூதி, மஞ்சள் அா்ச்சனை பிரசாதம் ஆகியன விரைவு தபால் மூலம் வீட்டிற்கு வந்து சேரும். மேலும் இதற்கான சிறப்பு விற்பனை புதன்கிழமை (ஜனவரி 6) முதல் பரமக்குடி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →