முகப்பு
ராமநாதபுரம்

20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பரமக்குடி நகராட்சி முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினா்.
பகிர்:

ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியா்களுக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாநில துணை பொதுச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். முதுகுளத்தூா் ஒன்றியச் செயலா் பாலமுருகன், மாவட்ட துணைச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக, நகா் தலைவா் சிவராமன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அவரவா் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் நகராட்சியில் மனு அளிப்பு

வன்னியா்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். இதில், பாமகவை சோ்ந்த வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →