ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

DIN

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து அண்மையில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை, ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துச் சென்றனா். இதனைக் கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 49 மீனவா்கள் மற்றும் 7 விசைப்படகுகளை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திங்கள்கிழமை முதல் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடருகிறது. இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT