முகப்பு
உலகம்

போர் எதிரொலி! பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

மத்திய கிழக்கு போரால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து....

Updated On : 7 மார்ச், 2026 at 6:38 AM
கோப்புப் படம்
பகிர்:

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத வகையில், ஒரே இரவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா, ரூ.55 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு ஒரே நாளில் விலை உயர்ந்திருப்பது இதுவே முதன்முறை ஆகும். இது மார்ச் 7 ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக், துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். மேலும், நாட்டில் போதுமான அளவுக்கு பெட்ரோல் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல்களைப் பெற்று செல்கின்றனர்.

குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஒரே வாரத்தில் சுமார் 25% வரை உயர்ந்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடர்ச்சியால், பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் பல்வேறு அத்தியாவசியத் தேவைப்பொருள்கள் விலை உயர்ந்து காணப்படுகின்றன.

summary

The prices of petrol and diesel have increased significantly in Pakistan due to the repercussions of the war.

முழு கட்டுரையைப் படிக்க →