போர் எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
மத்திய கிழக்கு போரால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து....
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.