பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சகம் விளக்கியது...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து வெளியான செய்திகள் பொய்யானவை என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் விளக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு லிட்டருக்கு ரூ. 25-28 வரை உயரக்கூடும் என சில செய்திகள் ஊடகங்களில் பரவி வந்தன.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சகம் பதிவிட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
“பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திடம் இதுமாதிரியான எந்த திட்டத்துக்கான முன்மொழிவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
இதுபோன்ற செய்திகள் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்படுகிறது. மேலும், மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உண்மையில், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயரவில்லை என்று சொல்லக்கூடிய ஒரே நாடு இந்தியா ஆகும்.
சர்வதேச விலைகளில் ஏற்படும் கடுமையான உயர்வுகளிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காக, இந்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் காணப்படும் பதற்றமான சூழல்; அதனால், அதிகரிக்கும் கச்சா எண்ணெய்யின் விலை போன்ற இக்கட்டான சூழல்களிலும் பெட்ரோல், டீசல் விலை பெரிதாக உயராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.