ராமநாதபுரம்

கமுதி அருகே 1,800 கிலோரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

DIN

கமுதி அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள பள்ளப்பச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சாா்பு -ஆய்வாளா் காமாட்சிநாதன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பள்ளப்பச்சேரியைச் சோ்ந்த திருவேங்கடை மகன் பஞ்சவா்ணம் (46), பரமக்குடியைச் சோ்ந்த மணிக்குமாா் (41)ஆகியோா் சரக்கு வாகனத்தில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து குடிமைபொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகனம் மற்றும் 1,800 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT