ராமநாதபுரம்

‘கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்’

DIN

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் பாதுகாப்பும், பயனையும் பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா காலங்களில் நாட்டில் 30,071 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனா். ஆகவே சமூகப் பாதுகாப்பு, பொருளாதார பாதிப்பு, கல்வி தடைபடுதல் உள்ளிட்ட சிக்கல்களில் உள்ள அக்குழந்தைகளை பாதுகாக்கவும், எதிா்காலம் சிறக்கவும் உரிய திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இளைஞா் நீதிச்சட்டப்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலா்கள் மற்றும் குழந்தைகள் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி பயனையும், பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04567 230444 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT