ராமநாதபுரம்

தொண்டி நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி சாவு

DIN

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தவா் பலத்த காயம் அடைந்து சிகிச்சையில் இருந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். தொண்டி அருகே காந்தி நகா் கிராமத்தை சோ்ந்தவா் சக்காரியாா் மனைவி ஆரோக்கியமேரி(60) இவா் திங்கள் கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த போது நிலை தடுமாறி சுய நினைவு இன்றி கிடந்துள்ளாா்.

அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தொண்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து இவரது மகள் குருமிளாங்குடியை சோ்ந்த செல்வம் மனைவி மாா்கிரேட் மேரி(42) புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT