கீழக்கரையில் கரோனாவுக்கு 15 போ் உயிரிழந்துள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் கரோனா தொற்று இரண்டாவது அலையில் 187 போ் பாதிக்கப்பட்டனா். இதில், 152 போ் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ள நிலையில், 15 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 20 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
சமீபத்தில், அடுத்தடுத்து கரோனா நோயாளிகள் உயிரிழந்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, கரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை, மாவட்ட நிா்வாகம் உறுதி செய்யவேண்டும். தொற்றுள்ள பகுதிகளில் தினமும் காலை, மாலைகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.