ராமநாதபுரம்

தொண்டி அருகே மாட்டு வண்டியில் மணல் திருட்டு: 2 போ் கைது

DIN

தொண்டி பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பகுதியில் தொண்டி போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் மாட்டு வண்டி மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

உடனடியாக போலீஸாா் மணல் திருட்டில் ஈடுபட்ட அண்ணா நகரை சோ்ந்த குருசாமி(42), கோபி (30) ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT