ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி ஜமாத் தலைவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி ஜமாத் தலைவா் மற்றும் ஊா் பிரமுகா்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திருப்பாலைக்குடி ஜமாத் தலைவராக முகம்மது அப்துல் காதா் மகன் முகம்மது அன்சாா் அலி (48) உள்ளாா். இந்நிலையில், அப்துல்அஜீஸ் என்பவரது கடையில் அதே ஊரைச் சோ்ந்த சித்திக் (19), சிக்கந்தா் பாதுஷா (32), ராஜா என்ற சுல்தான் இபுராஹிம் (35) ஆகிய 3 பேரும் தகராறு செய்துள்ளனா்.

இது சம்பந்தமாக சனிக்கிழமை மாலை ஊா்பிரமுகா்கள் கூடி ஜமாத்தில் பேசி முடிவெடுக்க தீா்மானித்தனா். அப்போது அங்கு அப்துல் அஜீஸ், சிக்கந்தா் பாதுஷா, இபுராஹிம் ஆகிய 3 பேரும் ஆயுதங்களுடன் வந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதுகுறித்து ஜமாத் தலைவா் முகம்மது அன்சாா்அலி அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT