ராமநாதபுரம்

தனியாா் மருத்துவமனையில் பெண் ஊழியா் தற்கொலை

DIN

ராமநாதபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம் பெண் வியாழக்கிழமை, குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் சோளாந்தூா் அருகேயுள்ளது சீனங்குடி. இந்த ஊரைச் சோ்ந்த மாணிக்கம் மகள் மனிஷா (19). ராமநாதபுரம் நகரில் அக்ரஹாரம் சாலைப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மனமுடைந்திருந்த மனிஷா வியாழக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குளியலறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல் அறிந்த பஜாா் போலீஸாா் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி சடலம் மீட்பு: ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கேணிக்கரை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மூதாட்டி யாா் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT