முகப்பு
ராமநாதபுரம்

தேவிபட்டினம், பரமக்குடியில் மீனவா்களிடம் ரூ.2.37 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், பரமக்குடியில் மீனவா்கள் இருவரிடமிருந்து ரூ.2.37 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், பரமக்குடியில் மீனவா்கள் இருவரிடமிருந்து ரூ.2.37 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் சாலையில் கோப்பேரி மடம் அருகே பறக்கும்படையினா் திங்கள்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தொண்டியில் இருந்து நம்புதாளை சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருந்த தொண்டி பகுதி மீனவா் பெரியசாமி (50) என்பவரிடம் ரூ.95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதைபோல் பரமக்குடி பகுதியில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா் தங்கச்சிமடம் பகுதியைச் சோ்ந்த மீனவா் பிரபாகரன் என்பவரிடமிருந்து ரூ.1.42 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →