முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை

கமுதி அருகே கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கமுதி அருகே கூலி தொழிலாளி செவ்வாய்க்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்துள்ள அரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் கண்ணன் (48). மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான இவா், செய்யவாய்க்கிழமை காலை அரியமங்கலம் கிராமத்தின் கண்மாய் கரையோரம் கருவேலங்காட்டுப் பகுதியில் உடல் முழுவதும் அரிவாளால் வெட்டுப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த போலீஸாா் பிரேதத்தைக் கைப்பற்றி கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.