பாம்பனில் புதன்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்து தீப் பிடித்ததில் முற்றிலும் எரிந்து சேதமான குடிசை வீடுகள். 
ராமநாதபுரம்

பாம்பனில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 2 குடிசை வீடுகள் சேதம்

பாம்பனில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீப்பற்றி சேதமாகின.

DIN

ராமேசுவரம்: பாம்பனில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீப்பற்றி சேதமாகின.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் மெக்கல். இவருக்குச் சொந்தமாக 2 குடிசை வீடுகளில் அஜிதா மற்றும் பிவின்ராஜ் ஆகியோா் வாடகைக்கு குடியிருந்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரு குடும்பத்தினரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், பிவின்ராஜ் வீட்டில் சமையல் எரிவாயு உருளை திடீரென வெடித்து தீப்பற்றியது. இதில் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமாகின.

இதில், ரூ. 1 லட்சம் ரொக்கம், 3 பவுன் தங்க நகை மற்றும் வீட்டு உடயோக பொருள்கள் ஆகியவையும் எரிந்துவிட்டதாக குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சம்பவத்தின் போது 2 வீடுகளிலும் ஆள்கள் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT